வங்கி உரிமத்தை ரத்து செய்த இந்திய ரிசர்வ் வங்கி.. சிக்கலில் வங்கி வாடிக்கையாளர்கள்!
ET Tamil April 27, 2025 05:48 PM
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜலந்தர் நகரத்தில் உள்ள இம்பீரியல் அர்பன் கூட்டுறவு வங்கியின் (Imperial Urban Co-operative Bank) உரிமத்தை ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஏப்ர 25, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி உரிமம் ஏன் ரத்து செய்யப்பட்டது?இந்த வங்கிக்கு தேவையான நிதி மூலதனம் (Capital) மற்றும் வருமானம் ஈட்டும் திறன் (earning prospects) இல்லாததால், வங்கியின் தற்போதைய நிதி நிலை அதன் வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என RBI தெரிவித்துள்ளது. மேலும், வங்கி தனது வைப்பு வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தொகையை திரும்பிச் செலுத்த முடியாத நிலைமையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. வங்கியின் மூடல் மற்றும் லிக்விடேஷன் நிலை என்ன?RBI, பஞ்சாப் மாநில கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் (Registrar of Cooperative Societies) மூலம் வங்கியை மூடுவதற்கும், ஒரு லிக்விடேட்டரை நியமிக்கவும் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் வங்கியின் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு, பெற்றோர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்தப்படும். வங்கியின் பணம் வைத்திருப்பவர்களுக்கு என்ன நடக்கும்?டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கிரெடிட் கேரண்டி கார்ப்பரேசன் (Deposit Insurance and Credit Guarantee Corporation) விதிமுறைகளின்படி, ஒவ்வொரு வாடிக்கையாளரும் ரூ.5 லட்சம் வரை காப்பீட்டுத் தொகையை ஒஎற உரிமை உண்டு. 97.79% வாடிக்கையாளர்கள் தங்கள் வைப்பு தொகையையை முழுமையாக பெற முடியும். அதனால் வங்கி இப்பொழுது எவ்வித வங்கி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது. வங்கியின் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.