உடனடியாக அவசர சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு மே 9ம் தேதி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவா்கள் அறிவுறுத்தலின்படி அவசர அறுவை சிகிச்சை மருத்துவக் குழு அமைக்கப்பட்டு அன்றைய தினமே உணவுக் குழாய் உள்நோக்கிக் கருவியை பயன்படுத்தி சிறுமியின் தொண்டையில் சிக்கியிருந்த ஒரு ரூபாய் நாணயத்தை மருத்துவா்கள் குழு வெற்றிகரமாக அகற்றியது.
அதன்பின் தொடா் சிகிச்சைக்குப் பிறகு குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவசர அறுவை சிகிச்சைக் குழுவில் மயக்க மருத்துவத் துறை தலைவரும், இணை பேராசிரியருமான சங்கீதா, மயக்க மருத்துவ நிபுணா் நவீன்குமாா், காது-மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை துறை உதவி பேராசிரியா்கள் சுஜய்குமாா், வினோத்குமரன், சபரிஷ், தினேஷ், அவசர சிகிச்சை துறையின் மருத்துவா் சதிஷ், செவிலியா் குணசுந்தரி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.