வைரல் வீடியோ... மராத்தியில பேசலன்னா மகாராஷ்டிராவை விட்டு வெளியேறு... மிரட்டல் விடுக்கும் ஆண்... எனது மொழி எனது உரிமை...துணிந்த இளம்பெண்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தி மொழி பேசாத இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுக்கிறார். இது குறித்து இளம் பெண்ணுக்கும் ஒரு ஆணுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையோர ஐஸ்கிரீம் கடையில் அந்த ஆண், “உனக்கு மராத்தி தெரியுமா?” எனக் கேட்கிறார். அதற்கு அந்த பெண் ஹிந்தியில், “நஹி ஆதா முஜே மராத்தி” என பதிலளிக்கிறார். இதனையடுத்து அந்த ஆண், “நீ மராத்தியில் பேசவேண்டும்” என வற்புறுத்த, பெண் தொடர்ந்து மராத்தி பேசத் தெரியாது எனக் கூறுகிறார்.
வாக்குவாதம் கடுமையாகிவிட்ட நிலையில், அந்த ஆண், “மராத்தியில் பேசல்லன்னா மகாராஷ்டிராவை விட்டு வெளியேறு” என கூறுகிறார். அதற்கு அந்தப் பெண், “நான் என் விருப்பப்படி பேசுவேன், என் மொழி என் உரிமை” எனக் கூறி தைரியமாக பதில் கூறுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் மொழி அடிப்படையில் ஒருவரை வற்புறுத்துவது தவறு என கண்டித்துள்ளனர்.
மேலும் ஒருவர், “மொழியியல் சகிப்பற்ற தன்மை தொடர்ந்தால், நம்மிடம் தேவையற்ற பிளவுகள் உருவாகும்” எனக் கூறிஉள்ளார். வீடியோ எப்போது, எங்கே ஏற்பட்டது என்பது தற்போது உறுதியாகவில்லை என்றாலும், இது மொழி அடிப்படையிலான விவாதங்களை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது .