அந்த வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பதேபூர் மாவட்டத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் மோனு கௌதம் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது. திருமணம் நிறைவடைந்த நிலையில் மணமகள் தன் குடும்பத்தினருக்கு பிரியா விடை கொடுத்து காரில் அமர்ந்திருந்தார். அப்போது காரில் ஏறுவதற்காக சென்ற மணமகன் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் நிலைமை மோசமாக இருந்ததால் முதலுதவி அளிக்கப்பட்டு வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மணமகளின் குடும்பத்தினர் மணமகனுக்கு நோய் இருந்ததாகவும் ஏமாற்றி திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட வரதட்சணை மற்றும் பொருட்களை திரும்பிக் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். திருமணம் முடிந்த உடனே மணமகன் மயங்கி விழுந்து உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.