ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது 'ஃபிளாஷ் விற்பனை' அறிவித்துள்ளது. இந்த சலுகைத் திட்டத்தின் கீழ் உள்நாட்டு விமானங்களுக்கான கட்டணம் வெறும் 1250 ரூபாய் முதல் தொடங்குகிறது. நாடு முழுவதும் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு குறைந்த விமானக் கட்டணத்தில் பறக்கலாம். அதே நேரத்தில், வெளிநாடு செல்வதற்கான முன்பதிவும் 6131 ரூபாய் முதல் தொடங்குகிறது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் இந்த சலுகைத் திட்டத்தில் பயணம் செய்ய மே 25 வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதுகுறித்து அந்நிறுவனத்தின் வலைத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் உள்நாட்டு வழித்தடங்களில் எக்ஸ்பிரஸ் லைட் விமானப் பயணத்திற்கான கட்டணம் 1250 ரூபாயில் தொடங்குகிறது. இந்தப் பிரிவில் செக்-இன் பேக் இல்லாமல் விமான டிக்கெட்டைப் பெறும் வசதி உள்ளது.
அதேபோல, எக்ஸ்பிரஸ் வேல்யூ கட்டணம் 1375 ரூபாய் முதல் தொடங்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இணையதளம், மொபைல் செயலி மற்றும் பிற முக்கிய முன்பதிவு தளங்கள் மூலம் டிக்கெட் இதற்கான டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஃபிளாஷ் விற்பனையின் கீழ், சர்வதேச வழித்தடங்களில் எக்ஸ்பிரஸ் லைட்டின் கட்டணம் 6131 ரூபாய் முதல் தொடங்குகிறது. அதேபோல, எக்ஸ்பிரஸ் வேல்யூ மற்றும் எக்ஸ்பிரஸ் ஃப்ளெக்ஸுக்கான டிக்கெட் சலுகை முறையே ரூ. 6288 மற்றும் ரூ. 7,038 ஆக உள்ளது.
வெளிநாட்டு விமானங்களுக்கான இந்த சலுகைகள் ஆகஸ்ட் 6, 12 மற்றும் 20 ஆகுஅ நாட்களுக்கான டிக்கெட்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். airindiaexpress.com வலைத்தளம் மூலம் செய்யப்படும் எக்ஸ்பிரஸ் லைட் முன்பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கமாட்டோம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எக்ஸ்பிரஸ் லைட் முன்பதிவின் கீழ் கூடுதல் கட்டணம் இல்லாமல் 3 கிலோ வரை கூடுதல் கேபின் பையை (லக்கேஜ்) முன்பதிவு செய்யும் விருப்பம் உள்ளது. உள்நாட்டு விமானங்களில் 15 கிலோ லக்கேஜுக்கு ரூ.1,000 கூடுதலாகவும், சர்வதேச விமானங்களில் 20 கிலோ லக்கேஜுக்கு ரூ.1,300 கூடுதலாகவும் செலுத்த வேண்டியிருக்கும்.
இது தவிர, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் லாயல்டி உறுப்பினர்களுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ள. லாக்டு-இன் உறுப்பினர்களுக்கு 10 கிலோ கூடுதல் செக்-இன் லக்கேஜ் மற்றும் 3 கிலோ கூடுதல் கேரி-ஆன் லக்கேஜ்களுக்கு 25 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மாணவர்கள், மூத்த குடிமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்குகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி குறைந்த செலவில் விமானப் பயணம் செய்யலாம்.
இந்திய விமான நிறுவனங்கள் இதுபோன்ற சிறப்புச் சலுகைகளை அவ்வப்போது அறிவிப்பது வழக்கம். பண்டிகைக் கால சிறப்புச் சலுகை மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களைக் கவரவும் போட்டி நிறுவனங்களுடன் போட்டியை வலுப்படுத்தவும் இதுபோன்ற சலுகைத் திட்டங்களை அடிக்கடி அறிவிக்கும். இந்த வாய்ப்புக்காகவே பொதுமக்கள் காத்திருப்பார்கள். இதன் மூலம் குறைந்த டிக்கெட் செலவில் விமானப் பயணம் செய்யலாம். முதல் முறையாக விமானப் பயணம் செய்ய காத்திருந்தவர்களுக்கும் இது நல்ல வாய்ப்பாக இருக்கும்