பொதுவாக வேப்பம்பூவை தூளாக்கி வெந்நீரோடு சேர்த்து குடிச்சா ,பல நோயை அடிச்சி துரத்தலாம் .இது போல சில இயற்கை வைத்திய குறிப்புகள் பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம் போட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி குடித்தால் அஜீரணம் சரியாகும்.
2.வேப்பம்பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரோடு சேர்த்து உட்கொள்ளுவதால் வாயுத்தொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்ணும் குணமாகும்.
3.செம்பருத்தி இலைகளை பொடியாக்கி தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.
4.வெள்ளைப்பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து சருமத்தில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் சரியாகும்.