தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ (Opal Suchata Chuangsri) மிஸ் வேர்ல்ட் 2025 பட்டத்தை வென்றுள்ளார்.ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ, கடந்த ஏப்ரல் 22 அன்று 'மிஸ் வேர்ல்ட் தாய்லாந்து 2025' பட்டத்தை வென்றிருந்தார்.
எத்தியோபியா அழகி முதல் ரன்னர்-அப் ஆகவும், போலந்து அழகி மூன்றாவது இடத்திலும், மார்டினிக் அழகி நான்காவது இடத்திலும் வந்துள்ளனர்.
யார் இந்த ஓபல் சுச்சதா சுவாங்ஸ்ரீ..?
2003 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி தாய்லாந்தின் துடிப்பான கடற்கரை நகரமான ஃபூகெட்டில் பிறந்த ஓபல், ஹோட்டல் உரிமையாளர்களின் மகளாகப் பிறந்தார். தாய், ஆங்கிலம் மற்றும் சீனம் என மூன்று மொழிகளில் பேசுபவர்.
ஓபலின் கல்விப் பயணம் பாங்காக்கில் உள்ள புகழ்பெற்ற ட்ரைம் உடோம் சுக்ஸா பள்ளியில் தொடங்கியது. அங்கு அவர் சீன மொழி கற்றார். அப்போது மொழிகள் மற்றும் சர்வதேச கலாச்சாரத்தின் மீதான தனது ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். தற்போது, அவர் தம்மசாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படித்து வருகிறார்.
மிஸ் வேர்ல்ட் 2025 இல் இந்தியா:
ஹைதராபாத்தில் நடைபெற்ற மிஸ் வேர்ல்ட் 2025 போட்டியில் இந்தியாவின் நந்தினி குப்தா டாப் 8 இடங்களுக்குள் நுழையத் தவறிவிட்டார். தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய போதிலும், 21 வயதான நந்தினி குப்தா, அதிகாரப்பூர்வ மிஸ் வேர்ல்ட் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.
ராஜஸ்தானின் கோட்டா அருகே உள்ள கைதூண் என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த நந்தினி குப்தா, நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். மிஸ் ராஜஸ்தான் பட்டத்தை வென்ற பிறகு, அவர் மிஸ் இந்தியா 2023 ஆகப் பட்டம் சூட்டப்பட்டார்.ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த நந்தினி குப்தாவின் பயணம் பலருக்கும் உத்வேகம் அளித்துள்ளது.