தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற உள்ள நிலையில், நாளை ஜூன் 9ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தும், இந்த விடுமுறை தினத்னை ஈடு செய்யும் வகையில் வரும் ஜூன் 14ம் தேதி பணி நாளாக செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வைகாசி 26ம் தேதி 09.06.2025 திங்கள்கிழமை அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.06.2025 2ம் சனிக்கிழமை அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அவர்கள் தெரிவித்துள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.