உலகையே ஆட்டிப் படைக்கும் 2 ஆற்றல்…! என்னன்னு தெரியுமா?
Tamil Minutes June 08, 2025 12:48 PM
love and money in the world

ஆசையும் , பசியும் , பணமும் இல்லாவிட்டால், மனிதன் மனிதனாகவே இருந்து இருப்பான். ஆனால் இப்போது பணத்தை தேடி அலைகிறான் வாழ்கையை இழந்து. வாழ்க்கையில் திருப்தியா இருக்கிற வரை. வாழ்க்கைய பத்தி ஒண்ணுமே தெரிஞ்சுக்க முடியல..

அதிருப்தி ஏற்படும்போதுதான் மனசு யோசிக்க தொடங்குது..ஒரு விஷயத்தில் திருப்தி ஏற்பட்டா.. இன்னொரு திருப்திக்கு மனசு ஏங்குது.. வாழ்க்கையில அதிருப்தி ஏற்பட ஏற்படதான் ..வாழ்க்கையை பற்றிய ஞானமே புரியுது.
வாழ்றது ரொம்ப ஈசியான விஷயம். அதைக் கஷ்டமாக்குகிறதே நம்மப் பேராசைகள் தான், வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்தா ஜாலி தான், உண்ணவும், உடுக்கவும், உறங்கவும் இவைகளுக்கு இடையில் தான் வாழ்க்கை.

புாிந்தவா்கள் வாழ்கிறாா்கள், புாியாதவா்கள் ஓடுகிறாா்கள், நம் வாழ்க்கை மிகவும் சிறியது, எனவே முடிந்த வரை சந்தோஷமாக இருக்க முயலுங்கள். யாரைப் பற்றியும் குறை பேசாதீர்கள், அடுத்தவன் பேசும் விமர்சனங்களைக் கடந்து முன்னேறிச் செல்வோம். ஏனென்றால் தெருநாயின் எல்லை, தெருவின் முடிவு வரை மட்டும் தான், ஆகையால் எப்போதும் அச்சத்தில் இருப்பதை விட, ஆபத்தை ஒரு முறை சந்திப்பதே மேல்,

இந்த உலகில் தலைவிதி என்று எதுவும் கிடையாது, எல்லாம் நீயாகத் தேடிக் கொண்டது தான். சிந்தித்து முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். அழகான நாட்கள் எப்போதும் அமைந்திடாது.. அமையும் நாட்களை அழகாக வாழ்ந்திடல் நல்லது. சுயலாபத்திற்காக சுயமரியாதையை இழந்து வாழ்வதெல்லாம் உயிரற்ற ஜடத்திக்கு சமம்.

உலகையே ஆட்டிப் படைக்கும் ஆற்றல் மிகுந்தது 2 மட்டும் தான். ஒன்று உருவம் உள்ள பணம். 2 உருவம் அற்ற அன்பு. இதைத் தான் மனிதன் மரணம் வரை தேடி அலைந்து திரிந்து களைத்து கடைசியில் பிடி சாம்பல் ஆகிறான். ஓடி ஓடி உழைத்த போது ஒட்டாத பணம் ஆடி அடங்கியவுடன் நெற்றியில் வந்து ஒட்டிக்கொள்கிறது. பணம் நிம்மதியைத் தருமா என்பது தெரியாது. ஆனால் பணம் இல்லாவிட்டால் நிம்மதி இருக்காது என்பது நிதர்சனம்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.