பொதுவாக எந்த சீசனில் எந்த பழம் விளைகிறதோ அந்த சீசன் பழங்களை நாம் சாப்பிட்டால் நம் உடல் பலம் பெறும் .இந்நிலையில் பலாப்பழத்தின் பலாச்சுளை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
1.தொடர்ந்து பலாப்பழத்தில் உள்ள பலாச்சுளையை சாப்பிடுவதால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது .,
2.பலாச்சுளை மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது.
3.பலாப்பழத்தில் உள்ள பலாச்சுளைகளில் உள்ள பொட்டாசியம் , இரத்த அழுத்தத்தை குறைக்கிறது .
4. பலாச்சுளை மூலம் இதய நோய் வராமல் தடுகிறது.
5..பலாப்பழத்திலுள்ள பலாசுளையில் விட்டமின் ‘ஏ’ உள்ளதால் பார்வைக் குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது.
6.பலாச்சுளை மாலைக்கண் நோயையும் குணமாக்கும்.
7.தொடர்ச்சியாக பலா சுளை சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராமல் நம் கண்ணை காக்கிறது .
8.நமது உடல் சோர்வாக இருக்கும்போது, பலாப்பழத்தைச் சாப்பிட்டால் உடல் சோர்வு நீங்கிவிடும் ,
9.பலா சுளை சாப்பிடுவதால் புத்துணர்ச்சி கிடைக்கும்.
10.பலாப்பழத்தின் பலாக்காயை சமைத்து சாப்பிடலாம்
11.பலாக்காயை சாப்பிட்டால் பித்த மயக்கம், பித்த வாந்தி குணமாகி ஆரோக்கியம் மேம்படும்