இன்று ஜூன் 9ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு திறக்கப்பட்டு ஒரு வார காலமே ஆன நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை தினத்தைத் தொடர்ந்து இன்று ஜூன் 9ம் தேதி திங்கட்கிழமை வைகாசி விசாகத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தொடர்ந்து அந்த மாவட்டத்திற்கு 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு இருப்பதால் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவைகள் இன்றும் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. என்னும் முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.