“குங்குமம் வைக்கும் போது நடுங்கிய கை…” உடனே திருமணத்தை நிறுத்திய மணப்பெண்…. ஷாக்கான உறவினர்கள்… பரபரப்பு சம்பவம்….!!
SeithiSolai Tamil June 11, 2025 03:48 AM

பீகார் மாநிலம் கைமோர் மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மணமகன் மணமகளின் நெற்றியில் குங்குமம் வைக்கும் சிந்தூர் தானம் நிகழ்வு நடைபெற்றது. அப்போது மணமகள் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது மணமகனின் கைவிரல்கள் நடுங்கியதாக தெரிகிறது.

இதனை பார்த்த மணமகள் சட்டென திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார். மணமகன் தரப்பில் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் மணமகள் அதனை கேட்கவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரு வீட்டாரையும் சமாதானப்படுத்தி திருமணத்தை நடத்த முயற்சி செய்தனர்.

ஆனாலும் மணமகள் பிடிவாதமாக இருந்து திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தார். மணமகனின் தந்தை திருமணத்திற்கு செலவு செய்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். இது தொடர்பாக இருவீட்டாறு பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.