விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி பலி
Top Tamil News June 13, 2025 05:48 AM

ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உயிரிழந்தார். அவருக்கு வயது 68.

அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான விஜய் ரூபானி விமானத்தில் இருந்ததாகக் கூறப்பட்டது. விமானத்தில் மொத்தம்: 242 பயணிகள், பணியாளர்கள்: 2 விமானிகள்,10 கேபின் பணியாளர்கள். இதில் 133 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில் அந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானியும் லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்க அவர் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் விமான விபத்தில் சிக்கியுள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் விஜய் ரூபானி. இவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1971ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்-ல் அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பாஜக பொதுச்செயலாளர், மாநில தலைவர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்தார்.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.