பகீர் வீடியோ... தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து… 2 பேர் துடிதுடித்து பலி !
Dinamaalai June 14, 2025 03:48 AM


 
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆக்ரா மாவட்டத்தில்   வெள்ளி உருக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில்  மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4  தொழிலாளர்கள் தீவிர தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவ இடத்திலேயே உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன.

இச்சம்பவம் ஆக்ராவின் கோட்வாலி பகுதியில் உள்ள கினாரி பஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் வெள்ளி உருக்கும் தொழிற்சாலையில் நடந்தது. வெடிப்பு காரணமாக மூன்று உலைகள் ஒன்றின் பின் ஒன்றாக வெடித்தன. வெடிப்பின் தாக்கத்தில் முழு கட்டிடம் இடிந்து விழுந்தது. உடனடியாக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.


அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. நெருக்கமான வீதிகள் மற்றும் கூட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், நிர்வாகம் அவசரமாக அந்த பகுதியை சீல் செய்து வைத்தது. சம்பவத்தின்போது ஆம்புலன்ஸ் நேரத்தில் வராததால், உள்ளூர் மக்கள் தான் இ-ரிக்ஷா மூலமாக காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
நகர துணை ஆணையர் சோனம் குமார்  “வெடிப்புக்கான காரணம் முதற்கட்ட தகவலின்படி சிலிண்டர் வெடிப்பு என கூறப்படுகிறது. இருப்பினும், இது முழுமையாக விசாரிக்கப்படுகின்றது.  தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன் படுகாயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.