நீதி கிடைக்கும் வரை டீ கொதிக்கும்... மாமியார் வீட்டுக்கு எதிரே கைவிலங்குடன் தேநீர்க்கடை நடத்தும் மருமகன்...!
Dinamaalai June 14, 2025 03:48 AM

 

ராஜஸ்தான் மாநிலத்தில்  பாரனில் உள்ள அன்டா பகுதியில், தனது மாமியார் வீட்டிற்கு அருகில், “498A டீ கஃபே” எனும் பெயரில் ஒரு தேநீர் கடையைத் திறந்து வியாபாரம் செய்து வருகிறார்.  அந்த கடையின் வெளியே, “நீதி கிடைக்கும் வரை டீ கொதிக்கும்” என்ற விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இவர்  கைவிலங்கு அணிந்து தேநீர் தயாரித்து தருகிறார்.   இந்த இளைஞர் மத்தியப் பிரதேசம், நீமுச்சைச் சேர்ந்த கிருஷ்ண குமார் தகாத். இவரது மனைவியின் குடும்பத்தினர், அவரது மாமியார், இவர்மீது 498A பிரிவின் கீழ் வரதட்சணை கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதை அவர் மறுத்து, அதற்கெதிராக சமூக விழிப்புணர்வு செய்யும் வகையில் இந்த தேநீர் கடையைத் தொடங்கியுள்ளார்.

மேலும், “டீ குடிச்சுட்டுப் பேசலாம்… 125 ரூபாய்க்கு எவ்வளவு நீதி கிடைக்கும் எனக் கணக்கிடலாம்” எனும் உரையையும் கடையில் இடம் பெற்றுள்ளது.  கிருஷ்ண குமார் தகாத், கடந்த காலத்தில் தனது மனைவியுடன் சேர்ந்து தேனீ வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தார்.  
2019ல்  இதைத் தொடங்கியதிலிருந்து பல வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார். ஏப்ரல் 2021ல், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான்  பாராட்டியதாகவும் கூறப்படுகிறது. பொய்யான குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துச் சொல்லும் பணியில் இந்த தேநீர் கடை மூலம் அவர் ஈடுபட்டு வருகிறார். இது சமூகத்தில் புதியவிதமான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.