சசிகலா காலில் விழுந்து ஆட்சியைப் பிடித்துக் கொண்டு பிறகு அதிமுகவுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியை பற்றி பேசுவதற்கான அருகதை இல்லை என நடிகர் எம் ஆர் ராதாவின் பேரன் வாசுவிக்ரம் கூறியுள்ளார்.
ஆற்காட்டில் திமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு அண்ணா சிலை அருகே நடைபெற்ற திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசாரத்தில் நடிகர் எம் ஆர் ராதாவின் பேரன் வாசுவிக்ரம் தெருமுனை பிரசாரத்திற்கு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த தெருமுனை பிரசாத்தில் பேசிய வாசு விக்ரம் திமுக கழகமானது அரக்கர் களை போன்றவர்கள் ஏனென்றால் அந்த காலத்தில் அரக்கர்களை வெட்டினால் அவர்கள் ரத்தமானது தெறித்து சொட்டு சொட்டாக விழுந்த ரத்தத்தில் எப்படி இன்னொரு அரக்கர்களை உருவாக்குகின்றதோ அதுபோன்று திமுக காலம் உள்ளவரை அரக்கர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள் என்று நகைச்சுவையாக பொதுமக்களிடையே தெரிவித்தார்.
பின்னர் தொடர்ந்து பேசிய அவர் எடப்பாடி துரோகி என்றும் அவர் எப்படி சசிகலா காலில் விழுந்து ஆட்சியைப் பிடித்துக் கொண்டு பிறகு அதிமுகவுக்கு துரோகம் செய்த அவன் திமுக கட்சியை பற்றி பேசுவதற்கான அருகதை அற்றவன் என்றும் அவரை தவழ்ந்த சாமியார் என்று பட்ட பெயர் வைத்து கூறினார்.
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தது எங்கள் முதலமைச்சர் ஸ்டாலினின் வரலாறு பற்றி பேசப்பட்டு வருகின்றது.இந்தியா பாகிஸ்தான் போர் போது முதல் முதலாக பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது திமுக கட்சி தான் என்று பல்வேறு சாதனைகளுக்கு அங்கீகாரம் கொடுத்தது தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று தெரிவித்தார்.
இறுதியாக பேசிய வாசுவிக்ரம் எம் ஆர் ராதா குடும்பமானது நன்றி கெட்ட குடும்பம் அல்ல மக்களாகிய நீங்கள் எனக்கு முதலாளி உங்களுக்கு என்றும் நன்றி கடன் பெற்றவன் நீங்கள் போட்ட பிச்சை தான் எங்கள் குடும்பம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன் திமுக நகர செயலாளர் ஏ.வி சரவணன், நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் மற்றும் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.