%name%
புது தில்லி ‘பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை’ இந்திய அரசின் வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து வரலாற்று ஆராய்ச்சி தொடர்பாக அறிவியல்பூர்வமான பல்வேறு முக்கிய பணிகளை நாடு முழுவதும் செய்து வருகிறது. இதன் கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, பயிற்சி பட்டறை கரூர் வள்ளுவர் ஹோட்டல் வாசுகி மகாலில் இன்று நடைபெற்றது.
பாரதீய வரலாற்றுத் தொகுப்புப் பேரவை கரூர் மாவட்ட கௌரவ தலைவராக வள்ளுவர் குழும தாளாளர் செங்குட்டுவன், பொதுச் செயலாளராக எழுத்தாளர் மருத்துவர் இன்ப பிரபஞ்சன், துணைத் தலைவராக முனைவர். ஸ்ரீ பாலசுப்பிரமணியன், இணைச் செயலாளர்களாக கல்வெட்டியல் ஆய்வாளர் மைதிலி, குளித்தலை சுந்தர், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்களாக கல்லூரிப் பேராசிரியர்கள் சுப்பிரமணியன், ரமேஷ், முனைவர் வெங்கடேஷ், கரூர் கல்வெட்டியல் ஆய்வாளர் மணி, வரலாற்று ஆர்வலர்கள் சரவணன், தீபா, ரமேஷ் பொறுப்பேற்றனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு புதுச்சேரி மாநில அமைப்புச் செயலாளர் கதிரவன் மறக்கப்பட்ட வரலாறும் மறைக்கப்பட்ட வரலாறும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். மாநில பொதுச் செயலாளர் முனைவர் ராமசுப்பிரமணியன் நிர்வாகிகள் பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்தார். கௌரவ தலைவர் வள்ளுவர் செங்குட்டுவன் அடுத்த ஆண்டிற்கான மாவட்ட செயல் திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றுவது குறித்து தலைமை உரை ஆற்றினார்.
இந்நிகழ்வில் திருப்பூர் கோட்ட செயலாளர் பேராசிரியர் மாரிமுத்து, திருப்பூர் மாவட்டச் செயலாளர் தினேஷ், கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கம் பரமசிவம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News First Appeared in