திருவண்ணாமலை கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை
Top Tamil News June 17, 2025 11:48 PM

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் நேற்று கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தினமும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தருகின்றனர். பக்தர்களின் வருகை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோவிலில் பொது மற்றும் கட்டண தரிசனம் வழியாக சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அதிலும் கட்டண தரிசனத்திற்கு ஒரு நபருக்கு ரூ.50 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. சமீப நாட்களாக அண்ணாமலையார்  திருக்கோவிலில் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாதாரண நாட்களில் வரிசையில் செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 2 முதல் 3 மணி நேரத்திற்கு மேல் ஆவதாகவும், விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 முதல் 5 மணி நேரத்திற்கு மேல் ஆவதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமின்றி வரிசையில் பக்தர்கள் ஒருவருக்கொருவர் முந்தி அடித்து செல்ல முயற்சிக்கும்போது ஆங்காங்கே பக்தர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு காயங்கள் ஏற்படும் சூழ்நிலையும் திருவண்ணாமலையில் நிகழ்கிறது.

இந்த நிலையில் இன்று அண்ணாமலையார் திருக்கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சிறப்பு ஆய்வு கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும் ரூ.50 கட்டண தரிசன டிக்கெட்டை ரூ.100-ஆக உயர்த்துவது குறித்தும், காலையில் 1 மணி நேரம் மற்றும் மாலையில் 1 மணி நேரம் பிரேக் தரிசனம் அமல் படுத்துவது குறித்தும், உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு என நேரம் ஒதுக்குவது குறித்தும், வி.ஐ.பி.கள் தரிசனம் குறித்தும், கோவிலுக்குள் பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செல்போன் கொண்டு செல்வதை தடை செய்வது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக கோவில் வளாகத்தில் கலெக்டர் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது எவ்வாறு பக்தர்களை அனுப்பினால் அவர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதும் குறித்தும், கூடுதல் வரிசைகள் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.