திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரப்பாக்கம் பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் ஒரு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் இவரது இளைய மகள் அவரது பாட்டி வீட்டில் தங்கி இருந்து 12-ஆம் வகுப்பு முடித்துள்ளார்.
இந்த மாணவிக்கு 17 வயது ஆகும் நிலையில் திருவண்ணாமலையில் உள்ள ஒரு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்தார். இதில் அந்த மாணவி ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மாணவியின் தந்தை ஏழுமலை அங்கு சென்றுள்ளார்.
அப்போது ஏழுமலைக்கு மகளின் காதல் விவகாரம் தெரிய வந்ததால் நேற்று முன்தினம் அவர் தன் மகளை கண்டித்துள்ளார். இந்த வயதில் காதலிக்க கூடாது என அவர் அட்வைஸ் செய்த நிலையில் தந்தை மகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபத்தில் அவர் தன் மகளை அறைந்து விட்டார்.
இந்நிலையில் அந்த வாலிபரிடம் அந்தப் பெண் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வந்ததால் நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென கிணற்றில் குதித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண்ணின் காதலன் அவரைக் காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்தார்.
அவர்கள் இருவரும் கிணற்றில் குதித்ததை ஏழுமலை பார்த்த நிலையில் அவர் கிணற்றில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயன்ற நிலையில் வாலிபரை மட்டுமே அவரால் மீட்க முடிந்தது. மகள் நீரில் மூழ்கி இறந்துவிட்டார். மேலும் அந்த மாணவி குதித்த வேகத்தில் ஆழமான பகுதிக்கு சென்று உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.