நான் யாரு அப்படிங்கிறத மத்தவங்க முடிவு பண்ண விட மாட்டேன்… அஜித்குமார் பகிர்வு…
Tamil Minutes June 18, 2025 07:48 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் இன்று தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் இவருக்கு கார் ரேசிங்கில் தான் அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. தனது 18 வது வயதில் கார் ரேசிங்கில் கலந்து கொண்டார் அஜித்குமார். அந்த நேரத்தில் மாடலிங்கும் செய்து வந்தார். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

1990களில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமான அஜித் குமார் காதல் மன்னன் வாலி போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தார். 2000 காலகட்டத்திற்கு பிறகு பல கமர்சியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக ஆனார் அஜித்குமார்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்குமார் நடித்த விடாமுயற்சி திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறி பிப்ரவரி ஆறாம் தேதி ரிலீசானது. இந்த படம் தள்ளிப் போனதால் எல்லா திரைப்படங்களின் ரிலீஸும் குழப்பத்திற்கு உள்ளானது. அதே போல் இவர் நடித்த Good Bad Ugly திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட அஜித்குமார் வாழ்க்கையில் தான் எப்படி ஒவ்வொரு நிலைகளையும் கடந்து வந்தேன் என்பதை பற்றி பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், ஒரு பர்சனாக நான் எப்படி என்பதை மற்றவர்களை முடிவு செய்ய நான் விட்டதில்லை. நான் தோல்வியுற்றாலும் ஒரு இடத்தில் நின்று திரும்பி பார்க்கும் பொழுது நான் அந்த நேரத்தில் முயற்சியை மேற்கொண்டேனே என்பதை நினைத்து சந்தோஷப்பட்டு கொள்வேனே தவிர துவண்டு போக மாட்டேன் என்று கூறியிருக்கிறார் அஜித்குமார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.