என்னை மெயின் ரோல்ல நடிக்க வச்சு இன்னிக்கு இந்த நிலமைல நான் இருக்க காரணம் இவர்தான்… யோகி பாபு ஓபன் டாக்…
Tamil Minutes June 18, 2025 07:48 PM

யோகி பாபு தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நகைச்சுவை நடிகர் மற்றும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் யோகி பாபு விஜய் டிவியில் லொள்ளு சபாவில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். 2009 ஆம் ஆண்டு யோகி என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். அன்று முதல் தனது பெயரை யோகி பாபு என்று வைத்துக்கொண்டார்.

தொடர்ந்து பையா, கலகலப்பு, பட்டத்து யானை போன்ற திரைப்படத்தில் நடித்தார். அதற்கடுத்ததாக ஷாருக்கான் உடன் இணைந்து சென்னை எக்ஸ்பிரஸ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து பிரபலமானார் யோகி பாபு. பின்னர் மான் கராத்தே, காக்கா முட்டை, கிருமி போன்ற திரைப்படங்களில் நடித்து நகைச்சுவை நடிகராக மாறினார் யோகி பாபு.

2018 ஆம் ஆண்டு கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகராக நடிக்க ஆரம்பித்தார் யோகி பாபு. அதை தொடர்ந்து மண்டேலா, கூர்கா, குலேபகாவலி போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தார் யோகி பாபு. இது தவிர முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக தோன்றியிருக்கிறார் யோகி பாபு.

தற்போது பல படங்களில் கமிட்டாகி பிசியான நடிகராக இருந்து வரும் யோகி பாபு ஒரு நேர்காணலில் தன்னை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது யார் என்பதை பகிர்ந்து இருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், நகைச்சுவை நடிகராக நடித்து வந்த என்னை மெயின் ரோலில் நடிகராக நடிக்க வைத்தது நெல்சன் தான். அதற்குப் பிறகு சிவகார்த்திகேயனும் இணைந்து கோலமாவு கோகிலா படத்தின் வாயிலாக என்னை ஹீரோவாக ஆக்கினர். அப்படத்திற்காக சிவகார்த்திகேயன் ஒரு பாடல் கூட எழுதியிருந்தார். அவர்கள் இருவரும் தான் இன்றைக்கு நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு காரணம். அதிலிருந்து தான் நான் மெயின் ரோலில் நடிக்க ஆரம்பித்தேன் என்று பகிர்ந்து இருக்கிறார் யோகி பாபு.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.