ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் முயற்சி: கோவை அரபிக் கல்லூரி முதல்வர் மற்றும் ஊழியர் கைது..! என்.ஐ.ஏ., அதிகாரிகள் தீவிர விசாரணை..!
Seithipunal Tamil June 19, 2025 10:48 AM

ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்த்த குற்றச்சாட்டில் கோவை அரபிக் கல்லூரி முதல்வர் உள்பட 02 பேரை என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரபிக் கல்லூரியில் அரபி மொழி கற்பித்து தருவதாகக் கூறி பயங்கரவாத சித்தாத்தங்கள் ரகசியமாக போதிக்கப்பட்டு வருவதாகவும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆள்சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக ஏற்கனவே என்.ஐ.ஏ., வழக்குப்பதிவு செய்திருந்தது.

அத்துடன், கடந்த 2022-ஆம் ஆண்டு கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களும் கோவை அரபிக் கல்லூரியுடன் தொடர்புடையவர்கள் என்பதும் என்.ஐ.ஏ., விசாரணையில் தெரிய வந்தது.

இதனையடுத்து, கோவை அரபிக் கல்லூரியின் செயல்பாடுகளை என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பிற்கு ஆள்சேர்த்த, அரபிக் கல்லூரி முதல்வர் அகமது அலி, அந்தக் கல்லூரியின் ஊழியர் ஜவஹர் சாதிக் ஆகிய இருவரை  என்.ஐ.ஏ., இன்று கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.