நீரிழிவு நோயை வெல்ல உதவும் மூலிகை பட்டியல்
Top Tamil News June 21, 2025 08:48 AM

பொதுவாக  சீந்தில் கொடி,    நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இது இருமல் சளிக்கு நல்லது மற்றும் கல்லீரலை பாதுகாக்கிறது.இதே போல் பல மூலிகைகளின் ஆரோக்கிய குணம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 

1.நெல்லிக்காய் மற்றும் மஞ்சள்  இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொள்ளும் போது அது மேலும் பலன் தருகிறது. இது ஒரு சிறந்த நீரிழிவு நோயை எதிர்க்கும் கலவையாகிறது. 

2.திரிபலா, மஞ்சிஷ்தா மற்றும் கோக்ஷூரா 
இவை மூன்றும் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.  

3.சுந்தி என்றால் உலர்ந்த இஞ்சி என்றும் மரிச்சா என்றால் கருப்பு மிளகு என்றும் பொருள்.  இவை இரண்டும் நீரிழிவு எதிர்ப்பு மசாலாப் பொருட்களாகக் இருக்கின்றன மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். 
4.வேம்பு மற்றும் குட்மார்
இவை இரண்டும்   இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க இது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.  வெல்லம் சாப்பிட்டாலும் அதன் சுவையை முற்றிலுமாக அழித்துவிடும் இந்தச் செடி, அதனால்தான் இதற்கு குட்மார் என்று பெயர்.  இந்த தாவரம் நீரிழிவு நோயாளிகளுக்கு என்று பரவலாக பயன்படுத்தப்படுகிறது.

5.இதேபோல், வேப்ப இலைகளும் பயன்படுத்த படுகின்றன மற்றும் வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவது முதல் வேப்பம்பூ மாத்திரைகள் சாப்பிடுவது வரை இதன் மூலம் நிறைய பயன்களை நாம் அடையலாம்.
6.சீந்தில் போல ஆயுர்வேதத்தில் மிகவும் பிரபலமான மூலிகை ஏதேனும் இருந்தால் அது அஸ்வகந்தா தான்.  அஸ்வகந்தாவை பயன்படுத்தி, நீங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கலாம், சோர்வைக் குறைக்கலாம்
7. கறிவேப்பிலை, முருங்கை, இலவங்கப்பட்டை, வெந்தயம் போன்றவை நீரிழிவு நோய்க்கு உதவும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.