“இனி மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு இவர்களின் கையெழுத்து தேவையில்லை”… சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!
SeithiSolai Tamil June 21, 2025 07:48 PM

சென்னை உயர்நீதிமன்றம் மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவனின் கையெழுத்து தேவை இல்லை என உத்தரவிட்டுள்ளது. அதாவது விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஒரு மனைவி பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். ஆனால் பாஸ்போர்ட் அதிகாரி கணவனின் கையெழுத்தை பெற்று வருமாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அந்த பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனைவி பாஸ்போர்ட் பெறுவதற்கு கணவனின் கையெழுத்து தேவை இல்லை என உத்தரவிட்டது.

இது பற்றி நீதிமன்றம் கூறும்போது திருமணம் ஆகிவிட்டால் ஒரு பெண் தன் அடையாளத்தை இழந்து விடுவதில்லை. கணவனின் கையெழுத்தை பெற வேண்டும் என்பது ஆணாதிக்க நடைமுறையை காட்டுகிறது என்று கூறியது. மேலும் மனுதாரரின் விண்ணப்பத்தை 4 வாரங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.