இந்தமாதம் திருச்செந்தூர் முருகன் கோவில் உண்டியல் வருமானம் ரூ.2.59 கோடி!
Seithipunal Tamil June 23, 2025 06:48 AM

திருச்செந்தூர் கோவில் உண்டியல் மூலம் மொத்தம் ரூ.2 கோடியே 59 லட்சத்து 32 ஆயிரத்து 514 பணம் கிடைத்துள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல்கள் மாதந்தோறும் திறக்கப்பட்டு எண்ணப்படுகின்றன. இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், ரூ.2.59 கோடி வருமானமாக சேகரிக்கப்பட்டது.

தக்கார் அருள்முருகன் தலைமையில், இணை ஆணையர் ஞானசேகரன் முன்னிலையில் கோவில் வளாகத்தில் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் கணக்கு அலுவலர் ராஜாராமன், உதவி ஆணையர்கள் செந்தில்குமார் மற்றும் நாகவேல், கண்காணிப்பாளர் ரோகிணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

உண்டியல்களிலிருந்து:மொத்தமாக ரூ.2,59,32,514 பணம்,1 கிலோ 515 கிராம் தங்கம்,17 கிலோ 96 கிராம் வெள்ளி,883 வெளிநாட்டு நாணயங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டுள்ளன..இந்த எண்ணிக்கையில் பொதுமக்கள் பிரதிநிதிகளும், சிவகாசி பதினெண் சித்தர் மடம் வேத பாடசாலை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.