மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடக்கோரி மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “🥭 மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும் -
🥭 மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட #FSSAI தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்கிடவும் -
🥭 மாம்பழக் கூழுக்கான #GST-யை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திடவும் -
🥭 பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசும் ஒன்றிய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் PM-AASHA சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் (MIS) செயல்படுத்தவும் வலியுறுத்தி -மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சவுகான் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.