உயர்கல்வி பயில விரும்பும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அரசே ஏற்கிறது என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்களில் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைப்பாலினத்தவர்களுக்கான சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (24.06.2025) கலந்துகொண்டு, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு தெரிவிக்கையில்- திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தால் திருநங்கை அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
18 வயதிற்கு கீழ் உள்ள திருநங்கைகள், திருநம்பிகள் பெற்றோரின் வழிகாட்டுதலுடன் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 40 வயதிற்கு மேற்பட்ட திருநங்கைகள் விண்ணப்பித்து பயன்பெறலாம். திருநங்கைகள் ஓய்வூதிய திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1500 வழங்கப்பட்டு வருகிறது. திருநங்கைகளுக்கான திறன்வளர்ப்பு பயிற்சிகள் மாவட்ட திறன்வளர்ப்பு பயிற்சி மையம் மூலமாக பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
மேலும் 2025-2026 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சமூகநலத்துறையின் கீழ் திருநங்கைகளுக்கான கல்வி கனவு திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக திருநங்கைகளுக்கான கல்வி கனவு திட்டம் உயர்கல்வி பயில விரும்பும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் அரசே ஏற்கிறது. அதன்படி நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் திருநங்கை பௌர்ணா கல்வி கனவு திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகிறார்கள். மற்றொருவர் திருநங்கை சொர்ணா நாகர்கோவில் தனியார் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம் முதலாண்டு சேர்ந்து பயின்று வருகின்றனர். இவர்களுக்கு புதுமைப்பெண் திட்டம் வாயிலாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.
தொடர்ந்து புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டம் உயர்கல்வி பயிலும் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறுமாறு விதிமுறைகளில் தளர்வு செய்யப்பட்டு அரசாணை பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் திருநங்கைகள், திருநம்பிகள் பள்ளிப்படிப்பை அரசு மற்றும் தனியார் பள்ளியில் படித்திருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இன்று மாவட்ட சமூகநலத்துறை சார்பில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஒரே இடத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிட ஏதுவாக திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
இச்சிறப்பு முகாமில் 85 திருநங்கைகள் மற்றும் நம்பிகள் கலந்துகொண்டு திருநங்கைகள் நல வாரியம் மூலம் வழங்கப்படும் திருநங்கை, திருநம்பிகளுக்கான அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பித்துள்ளார்கள். விண்ணப்பித்துள்ள திருநங்கை மற்றும் திருநம்பிகளுக்கு உடனடியாக அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் முறையான ஓட்டுநர் பயிற்சி பெற்றுஇ ஓட்டுநர் உரிமம் பெற்றதிருநங்கை, திருநம்பிகள் தமிழ்நாடு முதலமைச்சர் சமீபத்தில் துவங்கி வைத்த பிங்க் ஆட்டோ திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். எனவே விரும்பமுள்ளவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் தோவாளை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சகாயநகர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, இறச்சகுளம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் 4 திருநங்கை சிறப்பு சுயஉதவிக்குழு ஆரம்பிக்கப்பட்டு, இக்குழுவில் 48 உறுப்பினர்கள் உள்ளார்கள். இவர்களுக்கு வங்கி கடன் இணைப்பு மூலம் உறுப்பினர்கள் கடன் பெற்று, தொழில் செய்து வருகின்றார்கள். இக்குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதை தொடர்ந்து அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது