பாமக கட்சியில் உள்கட்சி மோதல் சில மாதங்களாக நடந்து வருகிறது. அதில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி புதிய நபர்களை நியமித்து வருகிறார். மேலும் அன்புமணிக்கு பாமக தலைவர் பதவியை என்றும் தரமாட்டேன் எனவும் கூறியுள்ளார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் தோட்ட சுவர்களில் ஒட்டப்பட்டு இருந்த அன்புமணி ராமதாஸின் போஸ்டர்கள் முழுவதும் கிழிக்கப்பட்டுள்ளன.
அந்த போஸ்டர்களை கிழித்தது யார்? என்ற விவரம் இதுவரை வெளிவரவில்லை. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.