“தொடர் அட்டூழியம்”… இந்துக்களை பாதுகாப்பது உங்கள் கடமை… துர்கா கோவிலை இடித்ததற்கு வங்கதேசத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்…!!!
SeithiSolai Tamil June 27, 2025 08:48 PM

வங்கதேச தலைநகரமான டாக்காவில் துர்கா கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த கோவில் இடிக்கப்பட்டதற்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசு அந்நாட்டின் இந்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் மத கோவில்களை பாதுகாக்க தவறிவிட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். இடிக்கப்பட்ட கோவிலுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கு பதிலாக சட்டவிரோத நில பயன்பாடு என்று கூறி இடிக்க அனுமதித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

வங்கதேசத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழ்வது வருத்தமளிக்கிறது. இந்துக்கள் மற்றும் அவர்களின் சொத்துக்களை பாதுகாப்பது அந்நாட்டு அரசின் பொறுப்பு என்று அவர் கூறினார். மேலும் வருகிற 2026 இல் காலாவதியாகும் கங்கை நதி நீர் ஒப்பந்தத்தை புதுப்பிப்பது குறித்து வங்கதேசத்துடன் பேச இந்தியா தயாராக உள்ளது. வங்கதேசத்தின் நில வாயிலாக சில ஏற்றுமதிகளுக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகள், நியாயம், சமமான அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையிலானவை என்று கூறினார். ஆயுத ஆடைகள் மற்றும் சில நுகர்வோர் பொருள்களுக்கு கடந்த ஆண்டு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.