பாமக நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதால் கட்சியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் முடிவு எட்டப்படவில்லை. தனது மூச்சு இருக்கும் வரை பாமக கட்சியின் தலைவராக செயல்படுவேன் என ராமதாஸ் கூறினார்.
மேலும் ராமதாஸ் கட்சியின் நிர்வாகிகளை பதவியில் இருந்து நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். தந்தை மகனுக்கு இடையே சமூக பேச்சுவார்த்தை நடந்து இருவரும் ஒன்று சேருவார்கள் என தொண்டர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.