ஜப்பானின் பானாசோனிக் நிறுவனம் இந்தியாவிலும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் பிரிட்ஜ் மற்றும் வாஷிங் மெஷின் உற்பத்தி மற்றும் விற்பனையில் இருந்து வெளியேறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பானாசோனிக் இனி வீட்டு ஆட்டோமேஷன், ஏசி, பி டு பி தீர்வுகள் போன்ற பிரிவுகளில் கவனம் செலுத்த உள்ளது.
ஊழியர்கள் பணி நீக்கங்கள் இருக்கும். ஆனால் வாடிக்கையாளர் சேவை தொடரும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அரியானாவின் ஜஜ்ஜாரில் உள்ள தனது தொழிற்சாலையில் இந்த தயாரிப்புகளுக்கான உற்பத்தி யூனிட்டுகளை அந்நிறுவனம் மூடி வருவதாக கூறப்படுகிறது. இந்த முடிவால் போட்டி நிறுவனங்களான வேர்புல், வால்டாஸ், பங்குகள் நேற்று முதல் அதிகரித்து வருகிறது