“பள்ளி சீருடையில் 15 வயது சிறுமி…” வலுக்கட்டாயமாக தூக்கி சென்ற மர்ம நபர்…. பள்ளிக்கு வெளியே பகீர் சம்பவம்…. அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரல்…!!
SeithiSolai Tamil July 31, 2025 11:48 AM

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 15 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நொய்டாவில் உள்ள மதர் தெரசா பள்ளிக்கு வெளியே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சிறுமி பள்ளியிலிருந்து வெளியே வந்தவுடன், காரில் வந்த ஒருவர் சிறுமியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று கடத்தியது அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதும், பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. குற்றவாளியின் முகம் மற்றும் காரின் விவரங்கள் முழுமையாக சிசிடிவியில் பதிவாகியிருந்ததால், போலீசாருக்கு அவரை அடையாளம் காண்பது எளிதாகி விட்டது. உடனடியாக நடவடிக்கை எடுத்த போலீசார், குற்றவாளியை கைது செய்து, சிறுமியை கடத்த பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமி மீட்கப்பட்டாரா என்ற தகவல் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை. இந்த சம்பவம் பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி, பெற்றோர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த வழக்கை முழுமையாக விசாரித்து வருகின்றனர் என்றும், சிறுமியின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.