ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு இருக்கும் திண்டுக்கல் துரைராஜ் நகரில் காலை 7.30 மணி முதலே அமலாக்கத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். அதே போல, சீலப்பாடியில் உள்ள அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் வீடு, வள்ளலார் தெருவிலுள்ள மகள் இந்திராணி வீடு, மற்றும் வத்தகலகுண்டு சாலையில் உள்ள ஐ.பெரியசாமிக்குச் சொந்தமான அலமேலு இருளப்பா மில்கள் போன்ற 5 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
அமைச்சர் பெரியசாமியின் இல்லம்அமைச்சர் ஐ. பெரியசாமியின் வீட்டின் முன்பு 100-க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள் கூடியிருக்கின்றனர். அதே போல வள்ளலார் தெருவிலுள்ள உள்ள பெரியசாமியின் மகள் இந்திராணி வீடு முன்பும் பெண்கள் நாற்காலிகள் போட்டு அமர்ந்திருக்கின்றனர். 11 மணி அளவில் அமைச்சர் பெரியசாமியின் வீட்டிற்குக் கூடுதலாக சிஆர்பிஎப் வீரர்களும் வந்திருப்பதால் பரபரப்பாக உள்ளது.
ED: `தண்டனை இல்லாமலேயே சிறையில் அடைக்கும் அமலாக்கத்துறை’ - உச்ச நீதிமன்றம் காட்டமான விமர்சனம் Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group... இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk வணக்கம், BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள். ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk