'மோன்தா' புயல் ... அடுத்த 2 நாட்களுக்கு வடமாவட்டங்களுக்கு அதிகனமழை அலெர்ட்!
Dinamaalai October 25, 2025 03:48 PM

வடகிழக்கு பருவமழையின் ஆரம்பத்துடன், வங்கக்கடலில் ஏற்பட்ட முதல் மழை அமைப்பு தமிழகத்தின் வடமாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் மிதமான மழையை கொடுத்தது. ஆனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இந்த அமைப்பு புயலாக வலுப்பெறும் என கூறப்பட்டிருந்தாலும், தாழ்வு மண்டலமாக கூட மாறாமல் களைந்துவிட்டது. இதையடுத்து தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த தாழ்வுப்பகுதி இன்று (சனிக்கிழமை) காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீவிர தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும். மேலும், அது 27-ந்தேதி (திங்கட்கிழமை) புயலாக உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வடதமிழகத்துக்கு அருகில் நகருமா அல்லது ஆந்திராவை நோக்கிச் செல்லுமா என்பது இன்னும் உறுதியில்லை. புயல் வடதமிழகத்தை ஒட்டி நகர்ந்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த பெயரான ‘மோன்தா’ என பெயரிடப்பட உள்ளது; இதன் அர்த்தம் “அழகான மலர்”. வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடி, புயல் உருவானதும் அதிகாரப்பூர்வமாக இந்த பெயர் அறிவிக்கப்படும். புயல் வடதமிழகத்திற்கு சாதகமாக இருந்தால், 26 மற்றும் 27 அக்டோபர் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும், மீனவர்கள் 28-ந்தேதி வரை வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என சூறாவளி காற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.