கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி மற்றும் குடிநீர் கட்டணம் ஆகிய வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு வசதியாக அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் என கோவை மாநகராட்சி அறிவித்துள்ளது.
இந்த முகாம்கள் இன்று 1.11.2025 சனிக்கிழமை மற்றும் நாளை 2.11.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும். இந்த 2 நாட்களிலும் அனைத்து மண்டல வரிவசூல் மையங்களில் வழக்கம் போல் வரி வசூல் பணிகள் நடைபெறும். எனவே, பொதுமக்கள் இந்த வசதியினை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம்:
