முருங்கையை காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட இந்த நோய் குணமாகும்
Top Tamil News November 12, 2025 08:48 AM

பொதுவாக வீதிகளில் காணப்படும் முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களும் நமக்கு ஆரோக்கியம் கொடுப்பவை .குறிப்பாக முருங்கை இலைக்குள் நிறைய நன்மைகள் உள்ளது .இந்த முருங்கை இலையை தேநீர் போல குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும் .மேலும் முருங்கை மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் 
1.முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.
2.முருங்கைக்கீரையின் சாறு நம் ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கும் ஆற்றல் கொண்டது ., மேலும் மனப்பதற்றத்தைத் தணிக்கவும் இந்த முருங்கை வல்லதாம்.
3.மேலும் சிலருக்கு சர்க்கரை நோயிருக்கும் .இந்த நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.
4.சோயாவை போலவே  இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
5.மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்த முருங்கை  கீரையில் உள்ளது.
6.மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.
7.அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.
8.ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு,எடுத்து கொள்வோம் 
 9.இதை தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, நம் உடலில் ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.
10.மேலும் சிலருக்கு குழந்தையின்மைப் பிரச்சினையிருக்கும் .இந்த பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுகின்றது .

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.