சொத்து கேட்டு டார்ச்சர் செய்த மகனை கூலிப்படையை ஏவி போட்டு தள்ளிய தாய்
Top Tamil News November 12, 2025 11:48 PM

சொத்தை பிரித்து தரும்படி தொல்லை கொடுத்து வந்த மகனை ரூ 6 லட்சம் பணம் கொடுத்து கொலை செய்து சாலை விபத்தாக சித்தரிக்க முயன்ற தாய் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் மதனப்பள்ளி மண்டலம், வெம்பல்லே பஞ்சாயத்தில் உள்ள ஜவுகுபல்லேவைச் சேர்ந்த சியாமளாமாம்மா (41) கோதகோட்டா மண்டலத்தில் உள்ள குடிசிவாரிபள்ளேயைச் சேர்ந்த வெங்கடசிவ ரெட்டி தம்பதிக்கு  ஜெயபிரகாஷ் ரெட்டி (23) மற்றும் கிரிவர்தன் ரெட்டி ஆகிய இரண்டு மகன் உள்ளனர்.    வெங்கடசிவ ரெட்டி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்தார். இந்நிலையில் இரண்டாம் ஆண்டு எம்பிஏ படிக்கும் ஜெயபிரகாஷ் ரெட்டி, நான்கு மாதங்களாக மதுவுக்கு அடிமையாகி கல்லூரிக்குச் செல்லவில்லை. தினமும் தனது தாயுடன் சண்டையிட்டு, சொத்தைப் பிரித்து கொடுக்கும்படி  வற்புறுத்தி வந்தார்.  இந்தத் தொல்லையைத் தாங்க முடியாமல், அவரது தாயார் சியாமளாம்மா, மூன்று மாதங்களுக்கு முன்பு தனது இளைய மகன் கிரிவர்தன் ரெட்டியுடன் தனது பிறந்த ஊரான ஜவுகுப்பள்ளிக்குச் சென்றார். இந்த மாதம் 6 ஆம் தேதி, ஜெயபிரகாஷ் ரெட்டி ஜவுகுப்பள்ளிக்குச் சென்று, சொத்து தொடர்பாக மீண்டும் தனது தாயாருடன் தகராறு செய்தார். 

இதனிடையே இந்த மாதம் 7 ஆம் தேதி, அதிகாலையில் குடிசிவாரிபள்ளே அருகே உள்ள நெரெல்லா ஏரி கரையை ஒட்டி ஜெயபிரகாஷ் ரெட்டி  இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பெற்ற தாயே மகனை கூலியாட்களை வைத்து கொலை செய்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து சிஐ கே. கோபால் ரெட்டி மகன் தொல்லை தாங்க முடியாததால்  பெத்ததிப்பசமுத்திரம் மண்டலத்தில் உள்ள நாகன்னகோட்டாவைச் சேர்ந்த மகேஷ், பொலேரோ வாகனத்தில் முலகல செருவு சந்தைக்கு தக்காளியை கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டு இருப்பதால் சியாமளாம்மா அவருடன் ஏற்கனவே பழக்கம் இருந்ததால் தனது மகன் கொடுக்கும்  தொல்லைகளைப் பற்றிச் சொல்லி கொலை செய்ய வேண்டும் என்றார். இதற்கு மகேஷ் ரூ.10 லட்சம் என்று சொன்னதும், சியாமளாமா ரூ.6 லட்சம் கொடுக்க ஒப்புக்கொண்டார். இதனையடுத்து மகேஷ்   தனக்கு தெரிந்த  ராமாநாயுடு கோட்டாவைச் சேர்ந்த பானு பிரகாஷிடம் இதைச் சொன்னார்.

இதனையடுத்து அவர் மேலும் ஐந்து பேருடன் சேர்ந்து கொலை செய்ய  திட்டமிட்டார். இந்த மாதம் 6 ஆம் தேதி இரவு, மகேஷ் குடிசிவாரிப்பள்ளிக்குச் சென்று, ஜெயபிரகாஷ் ரெட்டியை அழைத்து, கொல்லப்பள்ளியில் உள்ள ஒரு மதுக்கடையில் பீர் வாங்கினார். அங்கிருந்து, அவரை தும்மனகுண்டாவுக்கு அழைத்துச் சென்றனர், அங்கு மீதமுள்ள  பைக்குகளில் வந்தனர். பின்னர், ஜெயபிரகாஷ் ரெட்டியை  பொலேரோ வாகனத்தில் குண்டவாரிப்பள்ளி சாலைக்கு அழைத்துச் சென்றனர். ஜெயபிரகாஷ் ரெட்டியை வாகனத்தில் இருந்து கீழே இறக்கி பேஸ்பால் பேட்டால்  தாக்கினர். இந்த அடிகளால் ஜெயபிரகாஷ் ரெட்டியால் எழுந்திருக்க முடியவில்லை. பின்னர்  பேட்டை அங்குள்ள புதர்களில் வீசி, மகேஷை  பொலேரோ வாகனத்தில் அழைத்துச் சென்று  பின்னர் சியாமளாம்மாவிடம்  விஷயத்தைச் சொன்னார். இதற்கு சியாமளாம்மா  ஜெயபிரகாஷ் ரெட்டியை அழைத்துச் சென்று மதனப்பள்ளி சாலையில் எங்காவது இறக்கிவிட்டு சாலை விபத்தை போன்று சித்திரிக்கும்படி கூறினார். இதனால் அங்கிருந்து, அவர்கள் புறப்பட்டு மதனப்பள்ளிக்கு சென்றனர்  ஆனால் அதிக போக்குவரத்து நெரிசல் காரணமாக, மகேஷ் குடிசிவாரிப்பள்ளி மீண்டும் வந்தனர். 


குடிசிவாரிப்பள்ளிக்கு அருகிலுள்ள மொரவா ஏரி கரை அருகே ஜெயபிரகாஷ் ரெட்டியை சாலையில் இறக்கிவிட்டு சாலையில் வீசினர். அதற்குள், ஜெயபிரகாஷ் ரெட்டி இன்னும் உயிருடன் இருப்பதையும், எழுந்திருக்க முடியாததையும் உணர்ந்த அவர்கள், அங்குள்ள ஒரு கல்லால் அவரது தலையில் அடித்து, ஒரு ஸ்க்ரூ டிரைவரால் அவரது கால்களில் பலமாக குத்தினர். பின்னர், அவர் இறந்ததும் கல் மற்றும் ஸ்க்ரூ டிரைவரையும் ஏரியில் வீசினர். ஜெயபிரகாஷ் ரெட்டி  சாலை விபத்தில் இறந்தது போல் அங்கேயே சித்தரித்து அங்கிருந்து சென்றனர். மகேஷ் அதிகாலையில் சியாமளாம்மாவுக்கு போன் செய்து, ஜெயபிரகாஷ் ரெட்டியைக் கொன்று, மொரவாவில் உள்ள உங்கள் கிராமத்திற்கு அருகிலுள்ள ஏரிக்கரையில்  சாலையில் வீசிவிட்டதாக கூறினார். பின்னர் அதே ஏரியில்  பொலேரோ வாகனத்தின் இருந்த இரத்தக் கறைகளைக் கழுவினார்.

கொலைக்காக பணத்தை தருமாறு சியாமலாம்மாவிடம் மகேஷ் கேட்டபோது, கொல்லப்பள்ளி மின் துணை நிலையத்திற்கு வருமாறு கூறினார். பணத்துக்காக அங்கு வந்த சியாமலாம்மா ,  ஏ.மகேஷ் (32), முளகலசெருவு மண்டலம் ராமநாயுனிகோட்டாவைச் சேர்ந்த ஜி.பானுபிரகாஷ் (23), முலக்கலச்செருவு மண்டலத்தைச் சேர்ந்த பி.சாய் கணேஷ் (22), முலக்கலைச் சேர்ந்த பி.சாய் கணேஷ் (22) ஸ்ரீ சத்ய சாய் புட்டபர்த்தி மாவட்டம், தனகல்லு மண்டலத்தில் உள்ள மார்பு ரிவாரிபள்ளையைச் சேர்ந்த முலகலசெருவு, பி.கிரண் (23), சி.ராகுல் பிரமோத் (20), மற்றும் கே.எம். தனகல்லு மண்டலம் செந்தருனிபள்ளைச் சேர்ந்த ஹரிபிரசாத் (19) ஆகியோர் இருப்பதை அறிந்து அவர்கள் அனைவரையும் போலீசார் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.