பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களில், டெல்லி ஐகோர்ட்டு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதமர் மோடி 1978-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றதாக அவரது ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான பதிவுகளை வெளியிடுமாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நீரஜ் என்ற சமூக ஆர்வலர் மத்திய தகவல் ஆணையத்திடம் மனு அளித்தார். அதை ஏற்ற ஆணையம், 1978-ம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பதிவேடுகளை வெளியிடவும், மனுதாரருக்கு அவற்றைப் பார்வையிட அனுமதிக்கவும் டெல்லி பல்கலைக்கழகத்துக்கு 2016 டிசம்பர் 21-ஆம் தேதி உத்தரவிட்டது.
அந்த உத்தரவை எதிர்த்து டெல்லி பல்கலைக்கழகம் உள்பட 6 பேர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதைப் பரிசீலித்த ஒற்றை நீதிபதி, “உயர் பதவியில் இருப்பதால் பிரதமரின் தனிப்பட்ட கல்வி விவரங்களை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை” என்று குறிப்பிடி, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்திருந்தார்.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக நீரஜ், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய்சிங், வழக்கறிஞர் முகமது இர்ஷாத் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இதனைத் தொடர்ந்தும் விசாரித்த தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடலா அடங்கிய அமர்வு, மேல்முறையீட்டில் தாமதமானதற்கான மன்னிப்பு மனுவிற்கு 3 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டது.
அதேபோல், பல்கலைக்கழகம் பதில் தாக்கல் செய்த பிறகு, மனுதாரர்கள் 2 வாரங்களுக்குள் எதிர்வினை அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த வழக்கின் மேலான விசாரணை ஜனவரி 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!