தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், வடகிழக்குப் பருவமழை மீண்டும் முழு வீச்சில் தொடங்கவிருக்கிறது. வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது, நவம்பர் 17 முதல் பருவமழை தீவிரமடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மீண்டும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கியிருந்தது. அதன் முதல் இரண்டு சுற்றுகளில் பல இடங்களில் மழை பெய்து நல்ல அளவு நீர் சேமிப்பு கிடைத்தது. ஆனால், கடந்த இரண்டு வாரங்களாக வானிலை வறட்சியாக இருந்தது. இந்நிலையில், தென்சீனக் கடல் பகுதியிலிருந்து கிழக்கு காற்றும், வட இந்தியாவிலிருந்து வடகிழக்கு காற்றும் தமிழகத்தை நோக்கி வீசத் தொடங்கியுள்ளன. இதன் தாக்கத்தால் மாநிலத்தின் சில பகுதிகளில் இன்றிலிருந்து மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் அடுத்தடுத்த காற்றழுத்தத் தாழ்வுகள் உருவாகும் நிலையில், அவை வலுப்பெற்று புயலாக மாறும் சாத்தியம் உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நவம்பர் 17 முதல் பருவமழை தீவிரமடையும். மேலும், டிசம்பர் மாதம் நடுப்பகுதியில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் எனவும் வானிலை நிபுணர்கள் கூறியுள்ளனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!