நம்பமுடியாத உண்மை! – கூட்டை காக்க 'என்னை கொன்றுவிடு' என இரசாயன சிக்னல் கொடுக்கும் நோய்வாய்ப்பட்ட இளம் எறும்புகள்! ஆய்வில் வெளிவந்த மர்மம்..!!!
SeithiSolai Tamil December 07, 2025 04:48 PM

சமூகப் பூச்சியினமான எறும்புகளின் வாழ்க்கை முறை குறித்து வியப்பூட்டும் ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கொடிய பூஞ்சை நோய்த் தொற்றுக்கு ஆளாகும் இளம் எறும்புகள் அந்த நோய்க் கிருமி இடம் முழுவதும் பரவாமல் தடுப்பதற்காக, தங்களைக் கொன்றுவிடுமாறு வேலை செய்யும் எறும்புகளுக்கு ஒரு சிறப்பு இரசாயன சிக்னலை வெளியிடுகின்றன.

இது “என்னை கண்டுபிடித்து அழித்துவிடு” என்ற சமிக்ஞைக்கு ஒப்பானது. இந்த சிக்னலை அறிந்தவுடன், தொழிலாளர் எறும்புகள் உடனடியாக நோய்வாய்ப்பட்ட இளம் எறும்பை அதன் கூட்டிலிருந்து வெளியே இழுத்து, அதன் மீது ஃபார்மிக் அமிலத்தைத் தெளித்து கொல்கின்றன.

இந்த அமிலமானது சக்திவாய்ந்த கிருமிநாசினியாகச் செயல்பட்டு, நோயை முழுவதுமாக அழித்துவிடுகிறது. இவ்வாறு ஒரு தனிப்பட்ட எறும்பு தன்னைத் தியாகம் செய்வதன் மூலம், முழு எறும்பு வசிக்கும் இடம் ஆரோக்கியம் உறுதி செய்யப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.