பள்ளியா? நரகமா? – பெற்றோர் நெஞ்சைப் பிளக்கும் தலைமை ஆசிரியரின் கொடூரச் செயல்…!!!
SeithiSolai Tamil March 04, 2026 07:48 PM

தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்து வரும் நிலையில், தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கல்வி கற்கும் புனிதமான இடத்தில், மாணவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டிய தலைமை ஆசிரியரே இத்தகைய இழிவான செயலில் ஈடுபட்டது கடும் கண்டனத்திற்குரியது. இந்த வழக்கினை விசாரித்த தர்மபுரி மாவட்ட மகிளா நீதிமன்றம், குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து தலைமை ஆசிரியருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

இத்தகைய கடுமையான தண்டனைகள் சமூகத்தில் இதுபோன்ற குற்றங்கள் குறைய வழிவகுக்கும் என்றும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி நிறுவனங்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.