“பேட் எடுத்தவன் எல்லாம் பேட்ஸ்மேன் இல்லடா” மூணு போட்டியிலும் பேட்டிங் தரல…. சக வீரரை கொடூரமாக தாக்கிய இளைஞர்….!!
SeithiSolai Tamil March 10, 2026 08:48 AM

நேபாளத்தில் கிரிக்கெட் விளையாட்டின் போது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சக வீரர் ஒருவரை மற்றொரு இளைஞர் கிரிக்கெட் பேட்டால் மிகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் தனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், சக வீரரை மைதானத்தின் நடுவிலேயே போட்டுத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்கு உள்ளான வீரர் தரையில் விழுந்தும் கூட, ஆத்திரம் குறையாத அந்த இளைஞர் பேட்டால் அவரைத் தொடர்ந்து தாக்கியது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

View this post on Instagram

A post shared by State Break (@statebreak.in_satna)