மீண்டும் பாதாள அறைக்குள் திரும்பும் அத்தி வரதர்... லட்சக்கணக்கானோர் தரிசனம்!
Dinamaalai March 11, 2026 09:48 AM

அத்திவரதர் மீண்டும் பாதாள அறைக்கு திரும்புகிறார். நேற்று இரவுடன் தரிசனம் நிறைவு பெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் பாதாள அறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். இந்த அரிய தரிசனத்தை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கும்பகோணத்தில் குவிந்தனர்.

அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு 10 நாட்கள் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமியை தரிசித்து செல்கின்றனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பியது. 

நேற்று தரிசனத்தின் கடைசி நாள் என்பதால் அதிகாலையிலேயே அதிகளவிலான பக்தர்கள் திரண்டிருந்து நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை தரிசித்து சென்றனர். இந்நிலையில் நேற்றிரவுடன் தரிசனம் முடிந்து மீண்டும் பாதாள அறைக்கு திரும்புகிறார் அத்தி வரதர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.