மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அபுதாபியின் ஹப்ஷன் எரிவாயு நிலையங்கள் மற்றும் பாப் எண்ணெய் வயல்கள் மீதான தாக்குதல்களால் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஏவுகணை விழுந்ததால் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை என அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் இணைந்து 'ஆபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4' மூலம் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய நிலைகள் மீது 63 கட்டங்களாக தாக்குதல்களை நடத்தியுள்ளன.
கத்தாரின் ராஸ் லஃப்பான் தொழில் நகரிலும் ஈரானிய ஏவுகணை தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஈராக் ஆயுதக் குழுக்களும் இந்த மோதலில் தீவிரமாகப் பங்கேற்று வருகின்றன.
இதற்கிடையில், சவுதி அரேபியா தனது அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளது. பிராந்திய அமைதியை பாதுகாப்பதே தங்களின் முன்னுரிமை என்றும், தூண்டப்பட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கப்போவதில்லை என்றும் சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் தெரிவித்துள்ளார்.
Edited by Siva