தமிழ் சினிமாவில் தி லெஜண்ட்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன். முதல் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதுமட்டுமலாமல் ரசிகர்கள் அந்த படக் காட்சிகளை ட்ரோல் செய்து வந்தனர். ஆனாலும் மனம் தளராமல் அடுத்த படத்திற்கு தயாரானார். கொடி, காக்கி சட்டை மற்றும் சமீபத்தில் சூர் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த கருடன் பட இயக்குனர் செந்தில்குமார் இயக்கத்தில் லீடர் படத்தில் நடித்து முடித்தார். அடுத்த மாதம் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. தனத் இரண்டாவது படத்தில் பக்குவப்பட்ட நடிகராகவே மாறியுள்ளார் சரவணன்.
இந்த நிலையில் சமீபத்தில் பேசிய லெஜண்ட் சரவணன், இந்த புதிய படத்தில் தான் ஏற்கும் மூன்று வேடங்களும் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் முயற்சிக்காத முற்றிலும் புதிய பரிமாணத்தில் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். பிரம்மாண்டமான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி உடல்மொழி, தோற்றம் மற்றும் அதிரடியான சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.
தனது மூன்றாவது படத்தையும் ‘லீடர்’ இயக்குனர் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் தான் இயக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.