திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் கட்சியை துவங்கியவர் சீமான், கட்சி துவங்கியது முதலே அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் சீமான். தமிழ் தேசியமே தனது கொள்கை என பேசி வருகிறார் சீமான்.
அதிமுக, திமுக இரண்டு கட்சிகளையும் சீமான் திட்டுவதால் இரண்டு கட்சிகளும் பிடிக்காதவர்கள் சீமானுக்கு வாக்களிக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளை வாங்கி ஆச்சரியப்படுத்தியது.. ஒரு பக்கம் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்தே நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் தனித்து போட்டியிடுகிறது.
இந்த 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தவெக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. சீமான் முதல் முறையாக தேர்தல் அரசியலில் இறங்கியிருக்கிறார். அதாவது, காரைக்கால் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். எனவே தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது.
இந்நிலையில் சேலம் வாழப்பாடியில் பிரச்சாரம் செய்த சீமான் தமிழகத்தில் 2 கோடி பேர் மது குடிக்கிறார்கள்.. அவர்கள் ஓட்டு போய்விடும் என்பதற்காக தேர்தல் வாக்குறுதிகளில் டாஸ்மார்க் மூடப்படும் என அதிமுக, திமுக இரண்டுமே சொல்வதில்லை. ஒரு நாட்டின் எதிர்காலத்தை குடிகாரன் தேர்ந்தெடுக்கலாம் என்றால் அந்த நாடு குடியரசு நாடா? அல்லது குடிகார அரசு நாடா? என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.. குடிப்பவர்கள் வாக்கு எங்களுக்கு வேண்டாம்.. குடிமக்களின் வாக்குதான் வேண்டும்’ என சீமான் பேசியிருக்கிறார்.