நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கும் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிபிஎஸ்இ நிர்வாகத்தின் இணையதளத்தில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்றன. குறிப்பாக பிப்.17 இரு தேர்வுகளும் தொடங்கிய நிலையில், 10ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 11 வரையிலும் பிளஸ் 2 தேர்வுகள் ஏப்ரல் 10 வரையிலும் நடந்தன. இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 43 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி இருந்தனர். தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றும் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் சிபிஎஸ்இ-ன் இணையதளங்களான cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் results.cbse.nic.in ஆகியவற்றில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் வெளியாகும் நேரத்தில் ஒரே சமயத்தில் பல லட்சம் பேர் இணையதளத்தைப் பயன்படுத்துவதால் சர்வர் முடங்க வாய்ப்புள்ளது. அதனால் இணையதளங்கள் தவிர்த்து வேறு 4 வழிகளிலும் தேர்வு முடிவுகளைக் காணலாம்.
ஆகியவற்றின் வழியாகவும் முடிவுகளை அறிந்துகொள்ள மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய cbse10 <roll number> <school number> <centre number> என்று டைப் செய்து, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அதேபோல,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை அறிய cbse12 <roll number> <school number> <centre number> என்று டைப் செய்து, 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இரு வகுப்பு தேர்வு முடிவுகளும் மே 13ஆம் தேதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.