IPL 2026: டெல்லிக்கு எதிராக RCB வீரர்கள் பச்சை நிற ஜெர்சி.. பெங்களூரு நிர்வாகம் இவ்வாறு செய்தது ஏன்?
TV9 Tamil News April 18, 2026 08:48 PM

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) இன்று அதாவது 2026 ஏப்ரல் 18ம் தேதி டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது., டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணி பச்சை நிற ஜெர்சிகளை அணிந்து களமிறங்கியது. ஆர்சிபியின் ஜெர்சிகள் எப்போதும் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்களின் கலவையாக இருக்கும் நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி வீரர்கள் ஏன் பச்சை நிற ஜெர்சிகளை அணிந்துள்ளனர் என்று கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணத்தை பற்றி தெரிந்து கொள்வோம். அதன்படி, சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘கோ கிரீன்’ (Go Green) முன்னெடுப்பு ஆகும்.

ALSO READ: ஆர்சிபிக்கு எதிரான போட்டி.. ‘இட்லி தோசை’ பாடலை ஒலிபரப்பிய டிஜே.. பிசிசிஐ-யிடம் சிஎஸ்கே புகார்!

100வது போட்டி:

2026 ஏப்ரல் 18ம் தேதியான இன்று, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் தங்களின் 100வது போட்டியில் விளையாடுகிறது. இந்தச் சிறப்பு நாளைக் குறிக்கும் வகையில் ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சிகளை அணிந்திருப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். மேலும், ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஸ்டேடியத்தில் 100 போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையையும் ஆர்சிபி பெற்றுள்ளனர்.

ஆர்சிபி அணி ஏன் பச்சை நிற ஜெர்சிகளை அணிந்தது?

7️⃣th 50+ partnership for Salty 🤝 Virat! ✅

That partnership entailed some classy and commanding shots from #VK18 and Salty. 💚 pic.twitter.com/wRD7SBRTRs

— Royal Challengers Bengaluru (@RCBTweets)


2011-ல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ‘கோ கிரீன்’ (பசுமைக்குச் செல்) என்ற முன்னெடுப்பைத் தொடங்கியது. 2011 முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒவ்வொரு பருவத்திலும் குறைந்தது ஒரு போட்டியையாவது பச்சை நிற ஜெர்சிகளை அணிந்து விளையாடி வருகிறது. இதன் மூலம், பெங்களூரு அணி புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பாடுபடுகிறது.

இதுகுறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமைச் செயல் அதிகாரி ராஜேஷ் மேனன் கூறுகையில், ”பல ஆண்டுகால கடின உழைப்பின் விளைவாக தங்கள் அணி கார்பன் சமநிலை அந்தஸ்தை அடைந்துள்ளது. இந்த முயற்சி பொதுமக்களுக்கும் உத்வேகம் அளிக்கிறது” என்று தெரிவித்தார்.

ALSO READ: ஹைதராபாத் அணியில் இணையும் பேட் கம்மின்ஸ்.. வலு பெறும் பந்துவீச்சு டிபார்ட்மெண்ட்!

ஆர்சிபி நிர்வாகம் உலகளவில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக, அணியின் பயணங்கள், தங்கும் விடுதி வசதிகள், மின்சாரப் பயன்பாடு மற்றும் டீசல் ஜெனரேட்டர்களில் இருந்து வெளியேறும் புகை ஆகியவற்றின் பதிவுகள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், இந்த முயற்சியில் ரசிகர்களையும் ஈடுபடுத்த ஆர்சிபி அணி முயன்றுள்ளது. போட்டி டிக்கெட்டுகளுடன் மெட்ரோ டிக்கெட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.