மீண்டும் இபிஎஸ் பக்கம்… தவெக விவகாரத்தில் பல்டி அடித்த அதிமுக எம்எல்ஏ – அரசியலில் அடுத்து என்ன ட்விஸ்ட்…?
SeithiSolai Tamil May 25, 2026 08:48 PM

சட்டப்பேரவையில் நடைபெற்ற தவெக-வின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்தது தவறு என்று அதிமுக எம்எல்ஏ ஆற்காடு சுகுமார் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த தான், தற்போது அந்த தவறை உணர்ந்து மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அணிக்குத் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வு அதிமுகவின் அரசியல் சூழலில் முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. தவறைத் திருத்திக்கொண்டு மீண்டும் தாய் கழகமான இபிஎஸ் அணியில் இணைந்துள்ளதாகவும், தவெக-வுக்கு அளித்த ஆதரவு ஒரு தவறான முடிவு என்றும் அவர் செய்தியாளர்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.