அலர்ட்... அப்புறமா வாங்குவது கஷ்டம்... 1960ம் ஆண்டு முதல் சான்றிதழ் பெறாதவர்கள் டிச.31-க்குள் பெறலாம்!
Dinamaalai September 08, 2024 05:48 AM

ஐடிஐயில் பயின்று இதுவரை சான்றிதழ் பெறாதவர்கள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என பேட்டை ஐடிஐ துணை இயக்குநர் ஆர்.கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பேட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) 1960 முதல் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களின் தேசிய தொழில் சான்றிதழ்கள் மற்றும் 2013 முதல் 2017 வரை பருவமுறை மதிப்பெண் சான்றிதழ் போன்ற சான்றிதழ்கள் பெறப்படாமல் உள்ளன. எனவே வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஐடிஐக்கு நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

நீண்ட காலமாக இச்சான்றிதழ்கள் உள்ளதால் குறிப்பிட்ட தேதிக்குள் பெறப்படவில்லையெனில் அரசு ஆவண காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். அதற்கு பின்பு சான்றிதழ் வேண்டி வருபவர்கள் அரசு ஆவண காப்பகத்திற்கு நேரில் சென்று சான்றிதழ் பெறும் நிலை ஏற்படும். எனவே, உடனடியாக சான்றிதழ் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.